close
Choose your channels

ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10ஆம் தேர்வு நடக்குமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததோடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மேலும் ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் மாணவர்களின் நலன் கருதியே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து வரும் 15ஆம் தேதி திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதும், ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜூன் 15ஆம் தேதிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.