close
Choose your channels

16 வயது சிறுமியை சீரழித்த 600 பேர்: மதுரையில் ஒரு கொடூரம்!

Thursday, December 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்களுக்கு எதிராகவும் பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது துரதிருஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 16 வயது சிறுமியை கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 600 பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் புரோக்கர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேர்கள் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 16 வயது சிறுமியை சீரழித்த 600 பேர்களின் விவரங்களை சேகரித்து அவர்கள் அனைவரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 16 வயது சிறுமியை 5 வருடங்களாக 600க்கும் மேற்பட்டோர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.