close
Choose your channels

புளூவேல் அட்மின் கைது! முடங்குமா ஆபத்தான விளையாட்டு?

Thursday, August 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகையே ஆட்டிப்படைத்து வந்த ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டின் அட்மின் ரஷ்ய போலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் ஒரு 17வயது மாணவி என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்'
புளுவேல் விளையாட்டின் கொடூரமான டாஸ்க்குகளை கொடுத்து கடைசியில் தற்கொலைக்கு தூண்டும் அட்மின் பணியை செய்து கொண்டிருந்தது இந்த 17 வயது சிறுமிதான் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்குகளை செய்யவில்லை என்றால் உறவினர்கள் அல்லது குடும்பத்தினர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதால் தான் இந்த விளையாட்டை விளையாடிய பலர் கொடூர டாஸ்க்குகளுக்கு கட்டுப்பட்டுள்ளார்கள் என்றும் கடைசியில் தற்கொலைக்கும் துணிந்துள்ளார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலிப் புடிகின் என்ற இந்த 17 வயது சைக்காலஜி மாணவி ஆரம்பத்தில் புளுவேல் விளையாட்டை விளையாடியவர் என்றும் ஆனால் 50வது டாஸ்க் ஆன தற்கொலை டாஸ்க்குக்கு இவர் அடிபணியாததால் இவர் இந்த விளையாட்டின் அட்மின் ஆக மாற்றப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் இந்த மாணவிக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்
17 வயது மாணவி தவிர மேலும் ஒரு இளைஞர் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேலாவது இந்த விளையாட்டு முடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.