close
Choose your channels

குளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்!

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்களுக்கு ஆண்களால்தான் பாலியல் பலாத்கார அபாயம் ஏற்படுகிறது என்றால், பெண்களுக்கு பெண்களே பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் நடைபெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு சமீபத்தில் வேலை கிடைத்தது. இந்த நிலையில் தினமும் அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடந்த 9ஆம் தேதி சிறுமியை காணவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி அதன் பின்னர் போலீசில் தகவல் கொடுத்தனர்

இந்த நிலையில் மறுநாள் ஒரு பெண் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு பெற்றோரிடம் கொண்டுவந்துவிட்டார். திருவனந்தபுரம் பகுதியில் தனியாக அலைந்து கொண்டிருந்ததாகவும் அவரைப் பார்த்து அவரிடம் முகவரி கேட்டு அழைத்து வந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து அந்த சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிந்தது

சிறுமியின் உறவுக்காரப் பெண் ஒருவர் சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அதன் பின்னர்தான் கூறியபடி கேட்காவிட்டால் இந்த குளிக்கும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் போட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அதன் பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் கொல்லம் மற்றும் ஒரு சில ஊர்களில் உள்ள லாட்ஜ்களுக்கு சென்று ஒரே நாள் இரவில் பலரிடம் விபசாரத்திற்கு தள்ளியுள்ளார். இதனால் ஒரே நாள் இரவில் லட்சக்கணக்கில் சம்பாதித்து அந்த சிறுமியை அம்போ என விட்டு விட்டு தப்பித்து விட்டதாக தெரிகிறது. இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் 30 வயது பெண் மற்றும் லாட்ஜ் நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.