17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: கோவையில் நடந்த கொடூரம்

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

கோவையில் 11ஆம்வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது காதலனுடன் சிறுவர் பூங்காவிற்கு வந்த போது அந்த பூங்காவில் இருந்த 6 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சிறுமியின் காதலனே உடந்தையாக இருந்தது தற்போது தெரியவந்துள்ள

து கோவை சீரங்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் 11ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது பிறந்த நாள் என்பதால் காதலனுடன் அந்த பூங்காவிற்கு வருகை தந்துள்ளார். இரவு 9 மணி என்பதால் அந்த பூங்காவில் யாருமில்லை. அப்போது பிறந்தநாள் கேக் வெட்டிய சிறுமி, காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அங்கிருந்த 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்

இந்த நிலையில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த காதலன், அதன்பின் மறைந்திருந்த தனது நண்பர்களை அழைத்து அவர்களுக்கும் காதலியை விருந்தாக்கியுள்ளான். ஒருவர் பின் ஒருவராக சிறுமியை சீரழிக்க, அதனை ஒருவர் வீடியோ படம் எடுக்க, மற்றவர்கள் பாதுகாப்பிற்காக சுற்றி இருந்துள்ளனர்

இந்த கொடூரம் அரங்கேறியதும் சிறுமி சிதிலமடைந்த நிலையில் தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் காதலன் உள்பட 7 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான காதலன் மணிகண்டன் என்பவனும் வீடியோ எடுத்த கார்த்திக் என்பவனும் தலைமறைவாகியுள்ளதாகவும், மற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காதலன் என நம்பி பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

தளபதி 64 படத்தில் இணைந்த நடிகரின் உணர்ச்சிவசமான டுவீட்:

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே 

உறவினரால் பாலியல் பலாத்காரம்: கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

சகோதரி கணவரின் தம்பியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'மாநாடு' படத்திற்காக சிம்பு இதுவரை செய்யாத விஷயம்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறுத்தை சிவா, அட்லி எல்லாம் என்ன பண்ணுவாங்க: சந்தானத்தின் 'டகால்டி' டீசர்

சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் 'டகால்டி'படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.