close
Choose your channels

17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: கோவையில் நடந்த கொடூரம்

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில் 11ஆம்வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது காதலனுடன் சிறுவர் பூங்காவிற்கு வந்த போது அந்த பூங்காவில் இருந்த 6 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சிறுமியின் காதலனே உடந்தையாக இருந்தது தற்போது தெரியவந்துள்ள

து கோவை சீரங்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் 11ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது பிறந்த நாள் என்பதால் காதலனுடன் அந்த பூங்காவிற்கு வருகை தந்துள்ளார். இரவு 9 மணி என்பதால் அந்த பூங்காவில் யாருமில்லை. அப்போது பிறந்தநாள் கேக் வெட்டிய சிறுமி, காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அங்கிருந்த 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்

இந்த நிலையில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த காதலன், அதன்பின் மறைந்திருந்த தனது நண்பர்களை அழைத்து அவர்களுக்கும் காதலியை விருந்தாக்கியுள்ளான். ஒருவர் பின் ஒருவராக சிறுமியை சீரழிக்க, அதனை ஒருவர் வீடியோ படம் எடுக்க, மற்றவர்கள் பாதுகாப்பிற்காக சுற்றி இருந்துள்ளனர்

இந்த கொடூரம் அரங்கேறியதும் சிறுமி சிதிலமடைந்த நிலையில் தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் காதலன் உள்பட 7 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான காதலன் மணிகண்டன் என்பவனும் வீடியோ எடுத்த கார்த்திக் என்பவனும் தலைமறைவாகியுள்ளதாகவும், மற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காதலன் என நம்பி பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.