close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான தகவல்

Sunday, December 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பெருவிழா விருந்தாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ’இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒருசில கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை ’ஹீரோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கிவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தை இந்த நிறுவனமே தொடர்ந்து தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றுமுன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஹீரோ’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது. அனேகமாக சிவகார்த்திகேயன்-ரவிக்குமார் இணையும் படம் குறித்த அறிவிப்பை தான் இந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.