close
Choose your channels

தமிழகத்தில் மீண்டும் உச்சம் பெற்ற கொரோனா: சென்னையில் மட்டும் 1487 பேர் பாதிப்பு

Saturday, June 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1989ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 1989 பேர்களில் சென்னையில் மட்டும் 1487 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 30444 ஆக உள்ளது

மேலும் இன்று கொரோனாவுக்கு 30 பேர்கள் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலியானோர் எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கொரோனாவுக்கு 160 பேர்கள் மட்டுமே பலியான நிலையில் ஜூன் மாதத்தில் 13 நாட்களிலேயே 237 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 1362 என்றும், இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 23,409 எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

அதேபோல் இன்று தமிழகத்தில் 17,911 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 691,817 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.