close
Choose your channels

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேருக்கு தூக்கு தண்டனை

Thursday, October 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேனி அருகே 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை சுந்தர் ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்து அதன் பின்னர் கொலையும் செய்துள்ளனார். இவ்வளவிற்கும் இந்த சிறுமி சம்பவம் நடந்தபோது சபரிமலைக்கு விரதம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவத்தினை அடுத்து சுந்தர் ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மூவருக்கும் தூக்கு தண்டனை மற்றும், தலா ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி திலகம் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.