close
Choose your channels

கமல் வைத்த பார்ட்டியில் யாஷிகா-ஐஸ்வர்யா கலந்து கொள்ளாதது ஏன்?

Thursday, October 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறுடன் முடிவடைந்து அதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. ஐஸ்வர்யாவுக்கு இரண்டாமிடமும் விஜயலட்சுமிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு விருந்து வைத்தார். இந்த விருந்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாலும் மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில் இந்த விருந்து குறித்த புகைப்படங்கள் எதிலும் இந்த மூவரும் இல்லை. மேலும் இந்த விருந்தில் மகத் தன்னுடைய காதலி பிராச்சியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட பணிகளால் மூவராலும் இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியவில்லையா? அல்லது மூவரும் திட்டமிட்டு விருந்தை புறக்கணித்தார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப்பெண் வெற்றி பெற்றது இந்த மூவருக்கும் ஏமாற்றமாக இருந்ததாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.