close
Choose your channels

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி: சென்னையில் யூடியூப் சேனல் குழுவினர் கைது!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து யூடியூப்பில் பதிவு செய்ததாக சென்னையில் யூடியூப் குழுவினர் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம்பெண்களிடம் யூடியூப் குழுவினர் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தங்களிடம் ஆபாசமாக பேட்டி எடுக்க முயற்சி செய்வதாக லட்சுமி என்ற பெண் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக யூடியூப் சேனலின் தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பார்வையாளர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக ஆபாசமாக பேட்டி எடுத்து அதனை யூடியூபில் பதிவு செய்து வருவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்த காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.