close
Choose your channels

பாரில் பழக்கம், பணம் கேட்டு மிரட்டல்: முடிவில் பரிதாபமாக கொலையான பெண்!

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் பாரில் பழக்கமான ஆண் ஒருவரை தனது வலையில் வீழ்த்தி பணத்தை தொடர்ச்சியாக கறந்து வந்த நிலையில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பையில் வசித்து வந்த ரோசினா என்ற 31 வயது பெண்ணுக்கு பாருக்கு செல்லும் பழக்கம் இருந்திருக்கின்றது. அப்போது அவர் ஒரு நபரிடம் நெருக்கமானார். இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி ரோசினா வீட்டிற்கு வந்த ரோசினாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ரோசினா கேட்ட பணத்தையும் அவ்வப்போது அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அதிக ஆசைப்பட்ட ரோசினா பெரும் தொகை ஒன்றை கேட்க அதனை கொடுக்காமல் அந்த நபர் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோசினா, கள்ள காதல் உறவை அவருடைய மனைவியிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு நாள் ரோசினாவின் வீட்டிற்கு வந்த நபர் அதிக அளவில் மது கொடுத்து மயக்கம் அடைய செய்து அதன்பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார்.

ரோசினாவின் கொலை குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சிசிடிவியில் பதிவான வீடியோவின் உதவியால் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.