close
Choose your channels

நடுரோட்டில் மன்னிப்பு கேட்டாரா தமிழ் நடிகை: அவரே அளித்த விளக்கம்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் நடுரோட்டில் மன்னிப்பு கேட்டதாக இணைய தளங்களில் பரவி வரும் வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்

ஜிவி பிரகாஷ் நடித்த 4ஜி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி சுரேஷ். சமீபத்தில் இவர் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் மோதி விட்டது. ஆனால் காரை ஓட்டிய காயத்ரியின் தோல்வி காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்

ஆனால் மோதப்பட்ட காரில் உள்ளவர்கள் காயத்ரி காரை விரட்டி பிடித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனது தோழி காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது தவறுதான் என காயத்ரி மன்னிப்பு கேட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து காயத்ரியிடம் வாதம் செய்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் இந்த நிகழ்வை வீடியோ எடுத்து நடிகை காயத்ரி குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு விளக்கம் அளித்த காயத்ரி ’ஒரு நடிகை என்று கூட பார்க்க வேண்டாம், ஒரு பெண் என்றாவது நினைத்து உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருப்பதை தவிர்த்து இருக்கலாம்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.