தூக்கு துரையின் சொந்த ஊரில் அஜித் ரசிகர்கள் கைது

  • IndiaGlitz, [Friday,January 04 2019]

தல அஜித் 'தூக்குதுரை' என்ற கேரக்டரில் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் கதை பெரும்பாலும் தேனியை மையமாக கொண்டுள்ள நிலையில் தேனியில் உள்ள அஜித் ரசிகர்கள் குஷியாகி முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகளவிலான போஸ்டர்கள், பேனர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி ஃபாரஸ்ட் ரோடு 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றிலும் 'விஸ்வாசம்' போஸ்டரை அஜித் ரசிகர்கள் ஒட்டினர். ஆனால் இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சிலர் சாணி அடித்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்கள் ஐந்து பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரஜினி-கமல் படங்களை மிஸ் செய்த மிஸ் செளத் இந்திய அழகி

ரஜினியுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பையும், கமல்ஹாசன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2018ஆம் ஆண்டு மிஸ் செளத் இந்திய அழகியும் நடிகையூமான மீரா மிதுன் இழந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

19 வருடங்களுக்கு முன் தொடங்கிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 2001ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் 'ஏலேலோ' என்ற திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

'பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். , சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தனர். ஆனால் இதுவரை அது நிறைவேறவில்லை

'விஸ்வாசம்' படத்தின் சென்னை தியேட்டர் லிஸ்ட் இதோ:

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தென்காசியில் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.