close
Choose your channels

தென்காசியில் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொசக்ன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது. சென்னை படப்பிடிப்பு ஒருசில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தென்காசியில் மிக நீண்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், பொங்கல் விடுமுறைக்கு சில நாட்கள் பிரேக் விட்ட பின்னர் மீண்டும் தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நாயகியே இல்லாமல் முழுநீள ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த த்ரில், சஸ்பென்ஸ் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். கார்த்தியின் 18வது படமான இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.