close
Choose your channels

தூக்கு துரையின் சொந்த ஊரில் அஜித் ரசிகர்கள் கைது

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் 'தூக்குதுரை' என்ற கேரக்டரில் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் கதை பெரும்பாலும் தேனியை மையமாக கொண்டுள்ள நிலையில் தேனியில் உள்ள அஜித் ரசிகர்கள் குஷியாகி முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகளவிலான போஸ்டர்கள், பேனர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி ஃபாரஸ்ட் ரோடு 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றிலும் 'விஸ்வாசம்' போஸ்டரை அஜித் ரசிகர்கள் ஒட்டினர். ஆனால் இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சிலர் சாணி அடித்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்கள் ஐந்து பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.