close
Choose your channels

இன்று கொரோனாவால் பாதித்தவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ் தகவல் 

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக தமிழகத்தில் சராசரியாக 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91,851 என்றும், 5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்றும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos