close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

Saturday, May 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்றும் கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவரகள் பாதிப்படைந்ததாக சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதன்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 526 பேர்களில் சென்னையில் மட்டும் 279 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3330 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 4 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 44 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 219 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 1824 பேர் குணமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் 12999 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2,19,406 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.