close
Choose your channels

கொரோனா வைரஸால் பாதித்த ரசிகர்: சிம்பு செய்த நெகிழ்ச்சியான செயல்!

Saturday, May 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும் உள்ளவர் என்றும் அவ்வப்போது ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்புவின் கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி சிம்பு ஆனந்தன் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிம்பு, உடனே சிம்பு ஆனந்தனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவர் விரைவில் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தனது ரசிகர்களுக்கு அவர் கூறுகையில் ’இந்த சோதனையான கட்டத்தில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரிடம் சிம்புவை நேரடியாக போன் செய்து ஆறுதலுடன் பேசியதோடு, விரைவில் குணமடைய வாழ்த்து கூறியது சிம்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.