close
Choose your channels

இன்று மட்டும் 66 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சென்னைக்கு அதிக பாதிப்பு!

Saturday, April 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 பேர்கள் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 66 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 43 என்றும், இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி இன்று மட்டும் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 94 பேர்கள் இதனையடுத்து கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 960 என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7,707 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 80,110 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.