close
Choose your channels

தமிழகத்தின் முக்கிய நகரில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

Tuesday, July 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இருந்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த மாதம் முழுவதும் ஞாயிறு அன்று மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது வரும் 24ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முழு ஊரடங்கு நாட்களில் பால், மருந்து பொருட்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.