close
Choose your channels

நடிகர் சிம்புவுக்கு சிறப்பு வாய்ந்த பிறந்த நாள் பரிசளிக்கும் துபாய் அரசு!

Wednesday, February 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் இன்று முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்களில் அப்டேட் நாளை வரும் என்று எதிர்பார்க்கிறது.

இந்த நிலையில் சிம்பு தற்போது துபாய் சென்று இருப்பதாகவும், துபாய் அரசு நாளை அவருக்கு கோல்டன் விசா வழங்க இருப்பதாகவும், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு சிம்பு தனது பிறந்த நாளை துபாயில் தான் கொண்டாடுவார் என்றும் மகத் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பிறந்த நாளன்று துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கெளரவப்படுத்துவதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துபாய் அரசின் கோல்டன் விசாவை ஏற்கனவே சஞ்சய்தத், மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், பார்த்திபன், ஊர்வசி ரெளட்டாலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.