close
Choose your channels

உயிருடன் மீட்கப்பட்டும் பலியான ஹரியானா சிறுமி!

Monday, November 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுமி ஒருவர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறுதலாக கீழே விழுந்த நிலையில் அவரை உயிருடன் மீட்க மீட்புப்படையினர் தீவிர முயற்சியில் இருந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் சிறுமி 50 அடியில் இருப்பதை உறுதி செய்த மீட்புப்படையினர் உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து ஆழ்துளை அருகே குழி தோண்டினர். இன்று அதிகாலை ஆழ்துளைக்கும் குழிக்கும் இடையே பாதை அமைத்து சிறுமியை உயிருடன் மீட்டனர்.

ஆனால் சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

ஆழ்துளையில் விழுந்த சிறுமியின் பெயர் ஷிவானி என்றும், பக்கத்து வீட்டுக்காரர் தோண்டிய ஆழ்துளை கிணறு பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது என்றும், அந்த ஆழ்துளையில் தான் ஷிவானி விழுந்து உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.