பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி தற்கொலை

  • IndiaGlitz, [Friday,May 18 2018]

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளமதி என்ற மாணவி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் நேற்று முன் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து ஆர்வத்துடன் தனது ரிசல்ட்டை பார்த்துள்ளார். ஆனால் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிய வந்ததால் இளமதி அதிர்ச்சி அடைந்தார். இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்ட இளமதி, இன்று திடீரென தனது வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் இளமதியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவி இளமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் விழுப்புரம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளமதியின் மரணத்தால் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

More News

ரூ.7 கோடி முறைகேடு குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளார்களின் கேள்விக்கு விஷால் பதிலளித்தார்.

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியீட்டு குழுவின் அனுமதியோடு மூன்று திரைப்படங்கள் வெளியாகி வருகிறது

சமூக சேவைகளுக்காக ஜிவி பிரகாஷ் பெற்ற மதிப்பு மிகுந்த பட்டம்

நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டு இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ்.

நயன்தாராவிடம் வெளிப்படையாக திருமண ஆசையை தெரிவித்த விக்னேஷ்சிவன்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் இருவரும் தங்கள் திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

சல்மான்கான் படத்தில் முக்கிய வேடம்: கனவு நனவான மகிழ்ச்சியில் பிரபல நடிகை

சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பாலிவுட் நடிகைகளுக்கும் இருப்பதுண்டு. அதிலும் தற்போதைய இளம் நடிகைகள் சல்மான்கானின் 90கள் படத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.