close
Choose your channels

நயன்தாராவிடம் வெளிப்படையாக திருமண ஆசையை தெரிவித்த விக்னேஷ்சிவன்

Thursday, May 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் இருவரும் தங்கள் திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் தனது திருமண ஆசையை நயன்தாராவுக்கு மறைமுகமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், அதில் தனது இன்ஸ்டாகிராம் பக்க லிங்க்கையும் இணைத்துள்ளார். இந்த இணைப்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் பெயரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து ரொமான்ஸ் போஸ் கொடுத்துள்ளனர்.

காதல் பறவைகளாக சுற்றி கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் தம்பதிகளாக பலர் விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.