close
Choose your channels

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி தற்கொலை

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளமதி என்ற மாணவி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் நேற்று முன் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து ஆர்வத்துடன் தனது ரிசல்ட்டை பார்த்துள்ளார். ஆனால் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிய வந்ததால் இளமதி அதிர்ச்சி அடைந்தார். இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்ட இளமதி, இன்று திடீரென தனது வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் இளமதியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவி இளமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் விழுப்புரம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளமதியின் மரணத்தால் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.