close
Choose your channels

'கேஜிஎஃப் 2' படத்திற்கு எழுந்த திடீர் சிக்கல்: படக்குழுவினர் அதிர்ச்சி

Monday, April 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைபோடுகிறது என்பதும் இந்தப் படம் இதுவரை ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கச் சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்களை மீட்டு அந்த மக்களுக்கு நல்ல வாழ்கையை அமைத்து தர முயற்சி செய்யும் ஒரு ஹீரோவின் கதைதான் கேஜிஎப் 2 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கதை எனது மகனின் கதை என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனது மகன் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும், அங்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்கத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்ததாகவும் எனது மகன் கடந்த 1996ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எனது மகனின் கதையை எனது அனுமதியில்லாமல் படக்குழுவினர் படமெடுத்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி எனது மகனை கெட்டவனாக சித்தரித்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு படக்குழுவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த பெண் கூறுவதில் உண்மை இல்லை என்று படக்குழுவினர் மறுத்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.