close
Choose your channels

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை பாராட்டிவிட்டு பதில் கூறிய பார்த்திபன்!

Sunday, May 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை சரியான செருப்படி கேள்வி என விமர்சனம் செய்து விட்டு அந்த கேள்விக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து நேற்று பதிவு செய்த பார்த்திபன், ‘நாளை சிரிக்க.. சிறக்க.. இன்றும் உள்ளிருப்போம் உறவே! என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் ’உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்தக் கேள்விக்கு தனது டுவிட்டரில் பதிலளித்து பார்த்திபன் கூறியதாவது: சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா ... உணவை உண்ண நாமிருப்போம் -நாளை! இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்’ என்று கூறியுள்ளார்.

பார்த்திபன் ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்தை கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கி இருந்தார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் ஒரே ஷாட்டில் ’இரவில் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைக்க உள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.