close
Choose your channels

பிரபல நடிகரின் 2வது மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்: என்ன காரணம்?

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஒருவரின் இரண்டாவது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வெளியான ’மனைவி ஒரு மாணிக்கம்’ ’ஜாதிமல்லி’ ’ஐந்தாம்படை’ ’பொன்னர் சங்கர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் முகேஷ். இவர் நடிகை சரிதாவை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்த நிலையில் முகேஷ் சரிதாவை 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் தேவிகா என்பவரை 2013ஆம் ஆண்டு முகேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தேவிகா தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது கணவர் குறித்து தான் எந்தவித குடும்ப வன்முறை குற்றச்சாட்டும் கூறப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து எட்டு ஆண்டுகள் ஆன பின்னும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அவரை விட்டு பிரிய முடிவு செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் முகேஷ் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என்றும் அவருடைய திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளை இணைப்பதுதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நடிகர் முகேஷ் தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.