close
Choose your channels

பொதுநலத்தோடும், சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்: எஸ்பிபி குறித்து சத்யராஜ்

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என தமிழ் திரையுலகினர் அனைவரும் நாளை மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளனர். இந்த நிலையில் பல முன்னணி பிரபல நடிகர்கள் தங்களுடைய சமூக வளைதளத்தில் எஸ்பிபி மிக விரைவில் மீண்டு வர வேண்டும் என்று தங்களுடைய கருத்தை வீடியோக்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரல் முக்கியமான காரணம். அந்த குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 படத்தில் வில்லனாக நடித்துள்ள நான் 100 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன் என்றால் அதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளது. அதில் ஒன்று உங்கள் குரல் வளம். நான் கதாநாயகனாக நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களான ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ ’கொடியிலே மல்லிகைபூ’ ’ஆண்டவன பாக்கணும் அவனுக்கு ஊத்தனும்’ போன்ற பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனால் நீங்கள் பூரண குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று நான் பொது நலத்தோடு வாழ்த்துகிறேன், சுயநலத்துடன் வாழ்த்துகிறேன். சீக்கிரம் குணம் அடைந்து வந்துருங்க பாலு சார்’ என்று சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.