close
Choose your channels

பிரியாவிடை பெறுகிறேன்: படப்பிடிப்பு முடிந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்த சூரி!

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தை ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்றும் தெரிந்தது. இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக சூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்...

நிவின்பாலி, அஞ்சலி, சூரி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் படமாக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.