close
Choose your channels

ஜோதிகாவின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின் சில ஆண்டுகள் திரை உலகிலிருந்து விலகி இருந்தார். அதன் பின் மீண்டும் கடந்த 2015ஆம் ஆண்டில் ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ’உடன் பிறப்பே’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ’கண்ட நாள் முதல்’ மற்றும் ’கண்ணாம்பூச்சி ஏனடா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரியா, ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.