close
Choose your channels

சசிகலாவை கொரோனாவுடன் ஒப்பிட்ட தமிழ் நடிகை!

Monday, February 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆன நிலையில் இன்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக எல்லையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும், சென்னை வரை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சசிகலா வருகை காரணமாக அதிமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடம் மூடல், அதிமுக அலுவலகம் மூடல் உள்பட இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழ் நடிகை கஸ்தூரி கிண்டலுடன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் பின்வருமாறு:

நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்குவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!

கொரோனாவுடன் ஒப்பிட்டு தமிழ் நடிகை கஸ்தூரி பதிவு செய்த இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos