close
Choose your channels

சில விஷயங்களை நீங்க தொடக்கூடாது: 'பேர் வச்சாலும்' ரீமிக்ஸ் பாடல் குறித்து குஷ்பு!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன், குஷ்பு உள்பட பலர் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ’பேர் வச்சாலும்’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் சமீபத்தில் சந்தானம் நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகை குஷ்பு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய போது ’ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்வது என்பதை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு சில விஷயங்களை தொடக்கூடாது என்று அவர் கூறினார்.

’ரம் ரம் ரம் ஆரம்பம்’ என்ற பாட்டை ரீமிக்ஸ் செய்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அது வெறும் டான்ஸ்பாடல் தான். ஆனால் பேர் வச்சாலும் என்ற பாடல் முழுக்க முழுக்க கதையை கிளைமாக்ஸ்க்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு பாடல். அந்தப் பாடலுக்காக எவ்வளவு திட்டமிட்டார்கள்? எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்.

மேலும் இந்த பாடல் வெளிவந்த நேரத்தில் இப்போது போல் சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் இதைவிட மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும் என்று குஷ்பு கூறினார். மேலும் இந்த பாடல் என்னுடைய பாடல் என்று கூற முடியாது என்றும், இந்த பாடலை கேட்டவுடன் கமல்ஹாசன் பாடல் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.