close
Choose your channels

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற தமிழ் நடிகை!

Friday, October 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசாவை பெறுவது ஒரு கவுரவம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த விசாவை இந்தியாவைச் சேர்ந்த பல திரையுலக நட்சத்திரங்கள் வாங்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்ட சில நடிகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக நடிகை ஒருவருக்கு கோல்டன் விசா கிடைத்தது என்றால் அது நடிகை ஊர்வசி ரெளட்டாலா என்பது தெரிந்ததே. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரெளட்டாலா, மேலும் சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவருக்கும் கோல்டன் விசா கிடைத்து உள்ளது. அவர்தான் நடிகை மீரா ஜாஸ்மின். துபாயில் நடைபெற்ற விழா ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அவர்கள் மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசாவை வழங்கினார். கோல்டன் விசாவை பெற்ற தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் லிங்குசாமி இயக்கிய ’ரன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் விஜய் நடித்த ’புதிய கீதை’ அஜித் நடித்த ’ஆஞ்சநேயா’ விஷால் நடித்த சண்டக்கோழி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.