close
Choose your channels

கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான்: மேக்னா ராஜ்

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான் என மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னாராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த மேக்னாராஜூக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் சூட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முழு கவனத்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மேக்னாராஜ், தற்போது தான் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் மேக்னாராஜ் தனது திருமண நாளை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ’எனது மகனுக்கும் எனக்கும் அவர் சரியானதை செய்ய அவருக்கு கடவுளின் வழிகாட்டுதல் தேவை என்று எனக்கு தெரியும், அதனால் தான் நான் கடவுளை மன்னிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.