close
Choose your channels

'தளபதி 65' நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா: படப்பிடிப்பு தள்ளிப்போகுமா?

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65’. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது என்பதும் இதனை அடுத்து நேற்று விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளி வந்தன. இந்த நிலையில் திடீரென 'தளபதி 65’ நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா விதி முறைகளை கடைபிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு மிகவும் நன்றி. நான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன். தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

‘தளபதி 65’ நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.