close
Choose your channels

சிகரெட் கேட்டு தகராறு செய்தார்களா கைதான நடிகைகள்? பெங்களூர் சிறையில் பரபரப்பு!

Saturday, September 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் என்ற கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது

போதை பொருள் விவகாரத்தால் கன்னட திரையுலகம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருவரும் பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்

இந்த நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவருக்கும் சிகரெட் மற்றும் மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சிறையில் இருக்கும் இவர்கள் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்ததாகவும் சிகரெட் கொடுக்க பெண் காவலர்கள் மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ராகினி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மேலும் போதைப் விவகாரத்தில் கன்னட நடிகர் பாலாஜி, தயாரிப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தேவராஜன் மகன் யுவராஜா ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.