close
Choose your channels

விவாகரத்து அறிவிப்புக்கு முன் முதல்முறையாக பயந்த நடிகை சமந்தா!

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார் என்பதும், இந்த அறிவிப்பு திரையுலக வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் அவர் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா அவருக்காக அளிக்கப்பட்டு இருந்த இருக்கையில் உட்கார்ந்தவுடன் ’கொஞ்சம் பயமாக இருக்கிறது’ என்று தெரிவித்தார். இதனை அடுத்து ஜூனியர் என்டிஆர், ‘பயமாகத்தான் இருக்கும் ஏனென்றால் அது ஹாட் சீட், இது ஹோஸ்ட் சீட் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி வரும் தசரா திருநாளில் முழுமையாக ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா 25 லட்சம் ரூபாய் வென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.