close
Choose your channels

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நடிகை!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி கூறி நடிகை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்காக இலவச புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சித்தூர் மாவட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சுமார் 10,000 புத்தகங்கள் வரை இலவசமாக வழங்க வேண்டும் என்று நடிகை ரோஜா கோரிக்கை விடுத்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு ஆயிரம் வீதம் 10 ஆயிரம் புத்தகங்கள் சித்தூர் மாவட்ட தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்காக வழங்க தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து தமிழக முதல்வருக்கு ஆந்திர வாழ் தமிழர்கள் சார்பாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகைரோஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.