close
Choose your channels

த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வு: முறைப்படி செய்யப்பட்ட ஈமச்சடங்கு!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வை அடுத்து முறைப்படி ஈமச்சடங்கு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

நடிகை த்ரிஷா விலங்குகளின் மேல் மிகவும் பிரியம் கொண்டவர் என்பதும் பீட்டா அமைப்பின் ஆதரவாளராகவும் அவர் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தனது வீட்டிலேயே பல நாய்க்குட்டிகளை யும் வளர்த்து வருகிறார். அவ்வாறு த்ரிஷா வளர்ந்து வரும் நாய்க்குட்டிகளில் ஒன்று நேற்று இறந்து விட்டதை அடுத்து அந்த நாய்க்கு இறுதி சடங்கை த்ரிஷா முறைப்படி செய்துள்ளார் .

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது ’ஜானா என்ற கருப்பு நாய்க்குட்டி நேற்று இறந்து விட்டது. அதற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாய்க்குட்டி என்னுடைய தேவதை’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த நாய்க்குட்டியின் இறுதிச்சடங்கை செய்ய உதவிய புளுகிராச் அமைப்புக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.