close
Choose your channels

அஜித்-விஜய்யை அடுத்து ரஜினி-ஷங்கர் மோதலா?

Saturday, October 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் தினத்தில் அஜீத்-விஜய் படங்கள் மோத உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினி மற்றும் ஷங்கர் படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இரு படங்களில் குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத், விஜய் படங்களை அடுத்து ரஜினி மற்றும் ஷங்கரின் படங்கள் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் மோத இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ராம் சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருப்பதால் இந்த படமும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியே இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்று வரும் நிலையில் அஜித், விஜய் படங்கள் மற்றும் ரஜினி, ஷங்கர் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.