close
Choose your channels

அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா: ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன் நிலை என்ன?

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு வெளிவந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானது

மேலும் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமிதாப்பின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் கொரோனா அறிகுறி லேசாக இருப்பதாகவும், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐஸ்வர்யாராய், ஆராதனா, ஜெயாபச்சன் ஆகியோர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.