close
Choose your channels

விவாகரத்து அறிவிப்புக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தனுஷ்-ஐஸ்வர்யா: என்ன நடந்தது?

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் நடிகருமான தனுஷும் 18 ஆண்டுகாலம் தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு இருதரப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா தரப்பிலிருந்து தனுஷ் - ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கில் உருவாகும் ’வாத்தி’ படத்திற்காக ஹைதராபாத்தில் தனுஷ் இருப்பதாகவும், அதேபோல் மியூசிக் ஆல்பத்தை இயக்கிவரும் ஐஸ்வர்யாவும் ஐதராபாத்தில் இருப்பதாகவும் இருவரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத வகையில் ஐஸ்வர்யாவை அவர் சந்தித்ததாகவும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் ஒருவரை ஒருவர் கடந்து, பேசாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பார்ட்டியில் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டதால் இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி இணைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்த்த நண்பர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் விரைவில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழும் காலம் வரும் என இரு தரப்பு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.