close
Choose your channels

ஜெயிலுக்கு போன கணவர், ஜாமீன் எடுக்க உதவிய நண்பருடன் மனைவி கள்ளக்காதல்: அதன்பின் நடந்த விபரீதம்

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவரை ஜெயிலுக்கு போனதை அடுத்து கணவரின் நண்பரிடம் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததை அடுத்து இந்த விஷயம் தெரிந்து ஜாமினில் வெளிவந்த கணவன் செய்த வெறிச்செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே பூவரசன் என்பவருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஒரு முறை திருடியபோது போலீசாரிடம் பிடிபட்டு நித்தியானந்தம் சிறைக்குச் சென்று விட்டார்.

கணவன் சிறைக்கு சென்றதை அடுத்து அவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என அவரது மனைவி சத்யா, நித்தியானந்தம் நண்பர் பிரதாப் என்பவரிடம் உதவி கேட்டார். சத்யாவுக்கு உதவி செய்வதாக பிரதாப் கூறிய நிலையில் திடீரென சத்யா, பிரதாப் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பின் இருவருமே நித்தியானந்தத்தை ஜாமீனில் எடுப்பதை மறந்துவிட்டு இருவரும் கள்ளக்காதலில் தீவிரமாக இருந்தனர்.

இந்த விஷயம் சிறையில் இருந்த நித்யாவுக்கு தெரிய வந்ததும் தனது நண்பர் பிலிப் என்பவரை அழைத்து உதவி கேட்டார். பின்னர் பிலிப்பின் உதவியுடன் ஜாமீனில் வெளிவந்த நித்தியானந்தம் பிரதாப்பை கொலை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து பிரதாப்பை பிலிப்பும் அவரது நண்பர்களும் மது அருந்த அழைத்துள்ளனர். பிரதாப் அதிக மது குடித்து போதையில் மயங்கி விழுந்ததும், பிலிப், நித்தியானந்தா, பூவரசன் ஆகிய மூவர் பிரதாப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதன்பின்னர் பிணத்தை வெகு தூரத்தில் உள்ள கிணற்றில் கொண்டுபோய் போட்டுவிட்டு அந்த கிணற்றை பாழுங்கிணறு போல் மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக தங்கள் மகன் பிரதாப்பிடம் இருந்து எந்தவித போனும் வரவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு நேரடியாக வந்து மகனைத் தேடினார்கள். மகன் எங்கும் கிடைக்காததால் இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்தனர். காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தபோது தான் பிரதாப் தனது நண்பர்களால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நித்தியானந்தம், பிலிப், பூவரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருகின்றனர்.

திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு போன கணவரை ஜாமீனில் எடுக்க உதவி கேட்ட இளம்பெண் திடீரென கள்ளக்காதலில் சிக்கியதால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.