close
Choose your channels

மிருணாள் தாக்கூரை அடுத்து இளவரசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’சீதாராமம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சீதா மகாலட்சுமி என்ற இளவரசி கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாகூருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிருணாள் தாக்கூரை அடுத்து நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இளவரசி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘மஹால்’ என்ற திரைப்படம் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் இளவரசியாக டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை நேற்று லால்பாக் அரண்மனையில் நடைபெற்றதாகவும் இந்த படத்தில் இளவரசியாக நடிப்பது தனது கனவு நனவானதாக உணர்கிறேன் என்றும் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரண்மனையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகை வேதிகா வில்லியாக நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சரவணன் ஒளிப்பதிவில் அருள் தேவ் இசையில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.