close
Choose your channels

சென்னை, திருப்பதி, கொச்சி: நயன் - விக்கியின் அடுத்த பயணம் ஹனிமூன் தான்!

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்க்கும் ஜூன் 9ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையானை சென்று தம்பதிகள் தரிசித்தனர். பின் மீண்டும் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில் தற்போது கேரளாவில் நயன்தாராவின் அம்மாவின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து நயன் - விக்கி தம்பதிகள் அடுத்ததாக ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கி விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியே வந்த போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. கொச்சியில் நயன்தாராவின் அம்மா வீட்டில் புதுமண தம்பதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது என்றும், அதன் பின் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும் சிறப்பு விருந்து தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் வெளிநாட்டில் ஹனிமூன் செல்லவிருப்பதாகவும், யாருமில்லாத தீவுகளை நயன்தாரா ஹனிமூனுக்கு தேர்வு செய்ததாகவும் அந்த தீவில் இருவரும் சுமார் இரண்டு வாரங்கள் வரை ஹனிமூன் காலத்தை கழிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹனிமூன் முடிந்து சென்னை திரும்பிய உடன் தான் அஜித்தின் அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை விக்னேஷ் சிவன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.