close
Choose your channels

வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின் பிக்பாஸில் திடீர் திருப்பம்?

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, ஷாரிக், அபினய் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வனிதா இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என வலுக்கட்டாயமாக வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெள்யேறிவிட்டதால் 11 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர். இதனை அடுத்து திடீர் திருப்பமாக இந்த வாரம் ஒரு வைல்ட்கார்டு போட்டியாளர் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அந்த போட்டியாளர் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளரா? அல்லது புது போட்டியாளராக என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் சுரேஷ் மற்றும் ஷாரிக் வெளியேற்றப்பட்டது அநியாயம் என்றும் இவர்களில் ஒருவர் தான் வைல்ட்கார்டு எண்ட்ரியாக வரவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக்பாஸ் யாரை வைல்ட்கார்டு போட்டியாளராக அனுப்புகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.