close
Choose your channels

ஐஸ்வர்யாராய் எனது அம்மா! 29 வயது இளைஞரின் அதிர்ச்சி அறிவிப்பு

Thursday, January 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நம்மூரில் ஒரு வயதான தம்பதி, நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறியதோடு நீதிமன்றம் வரை சென்ற நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யாராய் அவர்கள் தான் எனது தாயார், நான் அவருடன் வாழ விரும்புகிறேன்' என்று 29 வயது இளைஞர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திராவை சேர்ந்த 29 வயது சங்கீத்ராய்குமார் என்பவர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து, தான் ஐஸ்வர்யாராயின் மகன் என்றும் தன்னை அவர் செயற்கை கருத்தரித்தல் முறையில் லண்டனில் கடந்த 1988ஆம் ஆண்டு பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

1988ஆம் ஆண்டு பிறந்த தான், மூன்று வயது வரை  மும்பையில் தன்னுடைய பாட்டி பிருந்தா ராய் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகவும், தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானதாகவும் கூறியுள்ளார். கிருஷ்ணராஜ், பிருந்தாராய் ஆகியோர் ஐஸ்வர்யாராயின் பெற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுகள் தன்னுடைய தாயாரை பிரிந்து வாழ்வதாகவும், மீதி நாட்களில் அவருடன் வாழ ஆசைப்படுவதாகாவும், அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தான்  ஐஸ்வர்யாராய் மகன் என்பதை நிரூபிக்க தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கூறியபடி பார்த்தால் ஐஸ்வர்யாராய், உலக அழகி பட்டத்தை வெல்லும் முன்பே தன்னை பெற்றெடுத்ததாக கூறுகிறார். கடந்த 1973ஆம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யாராய், 1994ஆம் ஆண்டு தான் தன்னுடைய 21வயது வயதில்தான் உலக அழகி பட்டத்தை வென்றார். உலக அழகி பட்டத்திற்கு முன்பே அதாவது 15 வயதில் ஐஸ்வர்யாராய் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றார் என்று கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.