close
Choose your channels

ஐஸ்வர்யா ராயை டீச்சராக ஏற்று கொண்ட அபிஷேக் பச்சன்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை டீச்சராக ஏற்றுக்கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை நடிகர் அபிஷேக் பச்சன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஒரு மிகச் சிறந்த ஆசிரியை என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் போது ’மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், ‘எனது மகள் ஆராத்யாவின் படிப்பை முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராய் தான் பார்த்துக் கொள்வார் என்றும் எனது மகளுக்கு உலகின் மிகச் சிறந்த ஆசிரியை ஐஸ்வர்யா ராய் தான் என்றும் அவர் கூறியுள்ளார் .

மேலும் ஐஸ்வர்யா ராய் கணிதத்தில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆகையால் நான் அந்த பக்கமே போக மாட்டேன் என்றும் அவரே அனைத்தையும் கவனித்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளார். ஐஸ்வர்யாராய் ஒரு மிகச் சிறந்த ஆசிரியை என்று அபிஷேக் கூறிய தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.